Thursday, March 26, 2009

அரண்மனை நாயான பொன்முடிக்கு மு. ராஜேந்திரன் பதில்.

தமிழர் விரோத கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தாமும் ஒரு அமைச்சராக இருப்பதைக் காட்டிக் கொள்வதற்காக அமைச்சர் பொன்முடி மனநோயால் பாதிக்கப்பட்டவனுக்கு உரிய இயல்போடு எங்கள் பொதுச் செயலாளர் வைகோ அவர்களை ஒருமையில் பண்பாடற்ற வார்த்தைகளால் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சட்டக் கல்லூரிக்குள் காவல்துறை நுழைந்து தடியடி நடத்திய செயலுக்கு காரணமான தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் சரித்திரம் கண்டிராத இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல் அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும்.” இப்படித்தான் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ளக் கூடிய “நிதானத்தில்” இல்லாத போக்கிரி மந்திரியான நீ உயர்கல்வித் துறையை எந்த இலட்சணத்தில் நிர்வகிப்பாய்?
தார்மீகப் பொறுப்பேற்று முதல் அமைச்சர் ராஜினாமா செய்யச் சொன்னதை, டிஸ்மிஸ் செய்யச் சொன்னதாக வைகோவின்அறிக்கையை நீயாகத் திருத்தி பதில் என்கிற பெயரால் “சாராய வாந்தி’ எடுத்திருக்கிறாய்.


மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை யாரும் தங்கள் பரம்பரை பாத்தியதை சொத்தில் இருந்து தானமாகத் தந்துவிடவில்லை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க.வுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்து கடமையாற்றிய அப்பழுக்கற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வைகோவை கொலைப்பழி சுமத்தி தூக்கி எறிந்து தி.மு.க.வின் உயிர்ச் சக்தியை இழக்கச் செய்தது உன் தலைவரன்றி வேறு யார்?


வைகோவின் வெளியேற்றத்துக்குப் பின் அவருக்கு இணையான ஒரு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரை உன்னால் காட்டமுடியுமா?


ஏற்ற பதவிக்குப் பெருமையும், புகழும் சேர்த்த வைகோ எங்கே? இரகசியம் காக்க வேண்டிய மந்திரி சபை முடிவை கொல்லைப்புற வழியாக வெளியே சொல்லி மாட்டிக் கொண்ட உன் துரோகப் புத்தி எங்கே?


வைகோவை விடுதலை செய்யக் கோரி கோடி கையெழுத்தை மக்களிடம் பெற்று அனுப்பியது குக்கிராமங்களில் வேரோடிக் கிடக்கின்ற ம.தி.மு.க. தொண்டனே தவிர, அந்த விண்ணப்பத்தை போலி தி.மு.க.வான நீ கையால் தொட்டு எத்தனை பேரிடம் கையெழுத்து வாங்கினாய், சொல் பார்ப்போம்?


‘பொடா’ சட்டத்தில் பறிக்கப்பட்ட பேச்சுரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் காப்புரிமை பெற்று கம்பீரமாக வெளிவந்த தன்மானச் சிங்கம் தான் வைகோ.... எவரிடத்திலும் அண்டி ஒண்டி, ஒதுங்கி - குய்யோ, முறையோ எனக் குமுறி கூத்தாடி வெளிவந்தவர் அல்ல. வைகோவின் விடுதலைக்கு வைகோவின் சட்டப் போராட்டம்தான் காரணமே தவிர வேறு எதுவும் அல்ல.
1998ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கிய போது அ.தி.மு.கவுடன் நேர்த்தியான தோழமை கொண்டிருந்தபோதும், அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் நிகரற்ற செல்வாக்குப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியபோதும் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி கொள்கை வழி நின்று ஆட்சிக் கலைப்பு கோரமாட்டோம் என்று சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பிரகடனம் செய்து உன்னைப் போன்ற பதர்கள் பதவியில் தொடரக் காரணமாக இருந்த கொள்கை ஏறு வைகோ என்பதை மறந்துவிடாதே.
புது டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் வைகோ தலைமையில் இயங்கும் கட்சி தான் உண்மையான ம.தி.மு.க. என உத்தரவுப் பிறப்பித்த பிறகும் கட்சியைக் காட்டிக் கொடுத்த இரண்டு துரோகிகளை அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு ம.தி.மு.க. பெயரில் இன்று வரை அழைத்து அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்ற சில்லரைப் புத்திக்காரரிடம் உள்ள பண்பைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு நற்பண்பும் மனிதநேயமும் கொண்டவர் வைகோ என்பதை எந்தக் குன்றத்தின் மேல் நின்றும் என்னால் ஓராயிரம் உதாரணங்களுடன் சொல்ல முடியும். நீயா வைகோவுக்கு பண்பு போதிக்கப் புறப்பட்டிருக்கிறாய்!


தமிழ் ஈழ தேசத்திற்கு தியாகப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய வைகோவை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்பதையும் வைகோவை குறிபார்த்த துப்பாக்கி தோட்டாவை தம் உடலில் வாங்கிக் கொண்டு உயிர்த் தியாகம் செய்து வைகோவைப் பாதுகாத்தவன் விடுதலைப் புலி சரத் என்கிற வீரத்திருமகனே அன்றி அவருக்கு உயிர்ப் பிச்சை வழங்கியவர் எவருமில்லை என்பதுதான் அந்தச் சரித்திரப் பயணம் உணர்த்தும் உண்மையாகும்.


ம.தி.மு.க. சின்னாபின்னமாகிவிட்டது. கூண்டோடு காலியாகிவிட்டது என்றாலும் உன்னோடு கூட்டு வைத்து 4 எம்.பி.க்கள் வெற்றிபெற வழி வகுத்தவர் என்று நீ குறிப்பிடுகிறாய். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைகோவின் பிரச்சாரம்தான் மூல காரணம் என்று நாடும் ஏடும் சொன்னதை மறந்துவிட்டாயா? நான்கை கொடுத்து இழிவுபடுத்திய உனது பண்பை பொறுத்துக் கொண்டு நாற்பதும் வெற்றி பெற சுழன்றடித்த புயல் வைகோவின் தியாகத்தால் இன்று பதவிச் சுகம் அனுபவிக்கும் கூட்டம் எந்தக் கூட்டம் என்று ஊருக்குத் தெரியும்.


எங்கள் கட்சி சிறிய கட்சிதான் என்று மேடைகளில் கம்பீரமாக ஒப்புக் கொள்ளும் ஆண்மையாளர் வைகோ. கவிஞர் இக்பால் சொல்வான் பிறை நிலாவே கவலைப்படாதே, பூரணச்சந்திரன் உனக்குள் புதைந்து கிடக்கிறான் என்று. “பிறை நிலவைப் போல் ம.தி.மு.க. இன்றைய அரசியல் வானில் விளங்குகிறது. அது பூரணச் சந்திரனாக பிரகாசிக்கும் காலம் வந்தே தீரும். தமிழ் தேசியம் பேசுகின்ற உன்னைப் போன்ற திராவிடப் போலிகள் அந்த முழுமதியின் ஒளியில் குளிர்காய வரும்போது வாலிபர்களின் கால்களில் கிடக்கும் காலணிகள் அவர்களின் கைகளுக்கு வந்துவிடும் என்பதை மறந்துவிடாதே.


தறிகெட்டு, நெறிகெட்டு, முறைகெட்டு அதிகாரத் திமிரில் கொக்கரிக்கின்ற அரண்மனை நாயான பொன் முடியே!


ஈழத்துக்கு கலைஞர் கருணாநிதியை அனுப்புவதற்கு ராஜீவ்காந்தி தீர்மானித்தாரா? தமிழனாக அல்லது தமிழச்சியாக இல்லாத பல பேர் தமிழ் ஈழப்போரை கொச்சைப்படுத்தலாம். அதை சட்டை செய்ய வேண்டியது இல்லை. ஆனால், தமிழனாகப் பிறந்து ஈழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துகின்ற இனத்தின் துரோகிகள் யார்? வைகோ சிறையில் இருந்து வந்து பிரச்சாரம் செய்தால் அந்த அனுதாபத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி ஆண்டு அனுபவிக்கலாம் என திட்டமிட்டு, பசப்புமொழி பேசி நீலிக் கண்ணீர்விட்டவர்கள் யார்?
தாமாக வரும் மூத்திரத்தைப் பிடிப்பதற்கு மேடைக்கு பாத்திரத்தோடு சென்று மூச்சு நிற்கும் வரை பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தவர் பெரியார். சாவு நெருங்கிவிட்டபோதும் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று பேசியவர் அண்ணா. ஒரு இனமே கொடியவன் ராஜபக்ஷேவின் கோரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கும்போது உடல் நலிவைக் காரணம் காட்டுகிறவன் மனிதனாக இருக்கலாம். ஆனால், தலைவனாக இருக்க முடியாது என்கின்றேன். ஒப்புக் கொள்கிறாயா?


தமிழ் ஈழப்போரை முற்று முழுதாக ஆதரிப்பதால் எங்கள் பொது வாழ்வு நாசமாகிப் போனாலும் கவலை இல்லை என்று அறிவித்திருக்கிறார் வைகோ. ஈழத்தைக் காட்டி எனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி என்று அடிக்கடி சொல்லி வருகிறார் கலைஞர். இது சரிதானா?
இக்கேள்விகள் குறித்து வாய்நீளம் காட்டும் மந்திரி பொன்முடியே உன்னோடு ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். நீ தயார் தானா? ஆம் எனில் இடம். நேரம் அறிவிப்பு செய்.


இறுதியாக ஒரு வார்த்தை. இனப் பகையைத் தாக்கி அழிக்க நேருகின்ற போதிலும் நமது அடிப்படைப் பண்பாடு சிதைந்து விடக்கூடாது என அடிக்கடி வாலிபத் தம்பிகளுக்கு அறிவுரை வழங்குவார் என் தலைவர் வைகோ. அவரது அறிவுரையை இந்நிகழ்வில் என்னால் பின்பற்ற முடியவில்லை. முள்ளை முள்ளால் எடுப்பதற்காக நான் உனக்கு ஒருமையில் பதில் சொல்ல நேர்ந்துவிட்டது. இதற்காக எனது தலைவர் வைகோவிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
(அமைச்சர் பொன்முடிக்கு இம்மடல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.)
மு. ராஜேந்திரன்

No comments:

Post a Comment